search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவான், ரோகித் சர்மா அரைசதம்: இந்தியா 350 ரன்னை தாண்டுமா?
    X

    தவான், ரோகித் சர்மா அரைசதம்: இந்தியா 350 ரன்னை தாண்டுமா?

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்துள்ள இந்தியா, 350 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தவான் மற்றும் ரோகித் சர்மா தொடக்கத்தில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டனர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 11.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 19 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தவான் சிறப்பாக விளையாடி 53 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.



    அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 61 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் சேர்த்துள்ளது. இருவரும சிறப்பாக விளையாடி வருவதால் இந்தியா 350 ரன்களை தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது.
    Next Story
    ×