என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன பொருட்கள் மீது மேலும் ரூ.20 லட்சம் கோடி வரி- டிரம்ப் மிரட்டல்
Byமாலை மலர்6 Jun 2019 1:10 PM GMT (Updated: 6 Jun 2019 1:10 PM GMT)
சீன பொருட்கள் மீது 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரி வரிவிதிக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
லண்டன்:
உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, சீனா உடனான பேச்சுவார்த்தை சுவாரஸ்யமாக உள்ளதாகவும், அடுத்து என்ன நடக்கும் என பொறுமையுடன் பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் (300 பில்லியன் டாலர்) அளவிற்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அது சரியான நேரத்தில் செயல்படுத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா தொடர்ச்சியாக வர்த்தகப்போரில் ஈடுபட்டுவருவது உலக பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X