என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 3 வீரர்கள் பலி
Byமாலை மலர்2 Jun 2019 6:12 AM GMT (Updated: 2 Jun 2019 6:12 AM GMT)
அண்டைநாடான இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணை தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக சிரியா அரசு குற்றம்சாட்டியுள்ளது.
டமாஸ்கஸ்:
சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகளை வேட்டையாட இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.
அவ்வகையில், இன்று அதிகாலை சிரியாவின் தென்பகுதியான குனெய்ட்ரா அருகே சிரியா நாட்டின் ராணுவத்தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 7 வீரர்கள் காயமடைந்ததாகவும் சிரியா அரசு குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக, நேற்று இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹெய்ட்ஸ் அருகே சிரியாவில் இருந்து வீசப்பட்ட ஏவுகணைகளுக்கு பதிலடி தரும் வகையில் இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசு குறிப்பிட்டுள்ளது.
சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகளை வேட்டையாட இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.
அவ்வகையில், இன்று அதிகாலை சிரியாவின் தென்பகுதியான குனெய்ட்ரா அருகே சிரியா நாட்டின் ராணுவத்தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 7 வீரர்கள் காயமடைந்ததாகவும் சிரியா அரசு குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக, நேற்று இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹெய்ட்ஸ் அருகே சிரியாவில் இருந்து வீசப்பட்ட ஏவுகணைகளுக்கு பதிலடி தரும் வகையில் இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசு குறிப்பிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X