என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுதி அரேபியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை
Byமாலை மலர்22 May 2019 7:34 AM GMT (Updated: 22 May 2019 7:34 AM GMT)
சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத்:
சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த மாதம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஷேக் சல்மான் அல்-அவ்தாக், அவாத் அல்-குயார்னி மற்றும் அலி அல்-ஒமாரி ஆகிய 3 பேரும் பிரபல அறிஞர்கள் ஆவர். இவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஐ.நா சபையும் மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தும் அங்கு இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த மாதம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஷேக் சல்மான் அல்-அவ்தாக், அவாத் அல்-குயார்னி மற்றும் அலி அல்-ஒமாரி ஆகிய 3 பேரும் பிரபல அறிஞர்கள் ஆவர். இவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஐ.நா சபையும் மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தும் அங்கு இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X