என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய பணத்தில் எழுத்து பிழை - வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி
Byமாலை மலர்11 May 2019 9:13 AM GMT (Updated: 11 May 2019 9:13 AM GMT)
ஆஸ்திரேலிய பணத்தில் எழுத்து பிழை ஏற்பட்டதன் காரணமாக அந்நாட்டு ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில், முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் எடித் கோவானை சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய 50 டாலர் நோட்டுகளை அந்நாட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
50 டாலர் நோட்டில் எழுத்து பிழை இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அதே சமயம் புழக்கத்தில் இருக்கும் 50 டாலர் நோட்டுகளை மக்களிடம் இருந்து திரும்பப் பெறப்படாது என்றும், வரும் காலங்களில் அச்சிடப்படும் டாலர் நோட்டுகளில், இந்த பிழை சரி செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில், முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் எடித் கோவானை சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய 50 டாலர் நோட்டுகளை அந்நாட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இந்த டாலர் நோட்டில் கோவானின் உருவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரையின் வரிகள் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன. அதில் ‘ரெஸ்பான்ஸிபிலிட்டி’ என்ற வார்த்தை தவறுதலாக ‘ரெஸ்பான்ஸிபில்டி’ என்று அச்சிடப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 46 கோடி, 50 டாலர் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளன. நோட்டு அச்சிடப்பட்டு பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் அதில் உள்ள பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
50 டாலர் நோட்டில் எழுத்து பிழை இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அதே சமயம் புழக்கத்தில் இருக்கும் 50 டாலர் நோட்டுகளை மக்களிடம் இருந்து திரும்பப் பெறப்படாது என்றும், வரும் காலங்களில் அச்சிடப்படும் டாலர் நோட்டுகளில், இந்த பிழை சரி செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X