search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் - நேட்டோ படை தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
    X

    ஆப்கானிஸ்தான் - நேட்டோ படை தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். #Coalitionairstrikes #Afghanistanmilitants
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

    பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.



    இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள அர்கன்டாப் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நேட்டோ படைகள் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோல், கஸ்னி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள அன்டார் மாவட்டத்தில் மேலும் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Coalitionairstrikes #Afghanistanmilitants 
    Next Story
    ×