என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலியை மனித வெடிகுண்டாக மாற்றிய கொடூரம்- இலங்கை பயங்கரவாதிகள் பற்றி அதிர்ச்சி தகவல்
Byமாலை மலர்7 May 2019 8:17 AM GMT (Updated: 7 May 2019 8:17 AM GMT)
இலங்கையில் காதலித்த பெண்ணை மனித வெடிகுண்டாக மாற்றி, தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. #SrilankanAttack
கொழும்பு:
இலங்கையில் கடந்த மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையை உலுக்கிய இந்த தாக்குதலை 8 தற்கொலை படை பயங்கரவாதிகள் நடத்தியிருந்தனர். அந்த மனித வெடிகுண்டுகளின் படங்களை சமீபத்தில் இலங்கை ராணுவத்தினர் வெளியிட்டனர்.
அந்த படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற இந்து பெண்ணின் படமும் இடம் பெற்றிருந்தது. புலஸ்தினி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேத்தாத் தீவு என்ற பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் கல்லூரியில் படித்த போது முகம்மது ஹஸ்தும் என்ற முஸ்லிம் மாணவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
முகம்மது ஹஸ்தும் வலியுறுத்தியதால் புலஸ்தினி இந்து மதத்தை விட்டு விலகி முஸ்லிம் பெண்ணாக மாறினார். தனது பெயரை சாரா என்றும் மாற்றிக்கொண்டார்.
அந்த தாக்குதலின்போது முகம்மது ஹஸ்துமும் மற்றொரு மனித வெடிகுண்டாக மாறி இருந்தார். முகமது- புலஸ்தினி இருவரும் மனித வெடிகுண்டுகளாக மாறி நீர்க்கொழும்பு தேவாலயத்தில் புகுந்து தங்கள் உடம்பில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்க செய்திருப்பது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதை அறிந்ததும் புலஸ்தினி தாய் கவிதா கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் கூறியதாவது:-
எனது மகளை முகமது ஹஸ்தும் திட்டமிட்டு காதலித்து ஏமாற்றி கடத்தி சென்று விட்டான். அவன்தான் எனது மகளை மூளைச் சலவை செய்து மனித வெடிகுண்டு பயங்கரவாதியாக மாற்றி விட்டான்.
சமீபத்தில் கூட ஒரு தமிழ்ப்பெண், தன்னை மதம் மாற்ற முயற்சி நடப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார். “லவ் ஜிகாத்” என்ற பெயரில் இந்த கொடூரம் நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு கவிதா கூறியுள்ளார். #SrilankanAttack
இலங்கையில் கடந்த மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையை உலுக்கிய இந்த தாக்குதலை 8 தற்கொலை படை பயங்கரவாதிகள் நடத்தியிருந்தனர். அந்த மனித வெடிகுண்டுகளின் படங்களை சமீபத்தில் இலங்கை ராணுவத்தினர் வெளியிட்டனர்.
அந்த படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற இந்து பெண்ணின் படமும் இடம் பெற்றிருந்தது. புலஸ்தினி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேத்தாத் தீவு என்ற பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் கல்லூரியில் படித்த போது முகம்மது ஹஸ்தும் என்ற முஸ்லிம் மாணவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
முகம்மது ஹஸ்தும் வலியுறுத்தியதால் புலஸ்தினி இந்து மதத்தை விட்டு விலகி முஸ்லிம் பெண்ணாக மாறினார். தனது பெயரை சாரா என்றும் மாற்றிக்கொண்டார்.
அவர்கள் இருவரும் இலங்கை கிழக்கு பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் புலஸ்தினி மனித வெடி குண்டு பயங்கரவாதியாக மாறி நீர்க்கொழும்பு தேவாலயத்தில் தாக்குதல் நடத்தி இருப்பது தெரிய வந்தது.
எனது மகளை முகமது ஹஸ்தும் திட்டமிட்டு காதலித்து ஏமாற்றி கடத்தி சென்று விட்டான். அவன்தான் எனது மகளை மூளைச் சலவை செய்து மனித வெடிகுண்டு பயங்கரவாதியாக மாற்றி விட்டான்.
சமீபத்தில் கூட ஒரு தமிழ்ப்பெண், தன்னை மதம் மாற்ற முயற்சி நடப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார். “லவ் ஜிகாத்” என்ற பெயரில் இந்த கொடூரம் நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு கவிதா கூறியுள்ளார். #SrilankanAttack
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X