search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரானுக்கு மிரட்டல்? - விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள், குண்டு வீசும் போர் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா
    X

    ஈரானுக்கு மிரட்டல்? - விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள், குண்டு வீசும் போர் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

    பொருளாதார பலத்தால் பணியவைக்க முடியாத ஈரான் அரசை ஆயுத பலத்தால் மிரட்டடும் வகையில் விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள், குண்டு வீசும் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. #USsendsaircraftcarrier #USsendsbomber #USwarnIran
    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகள் ஈரானுடன் அணு ஆயுத சோதனைகள் செய்யாமல் இருப்பதற்காக  சலுகைகள் அளிப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டன. 

    பன்னாட்டு அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கத் தரப்பு மட்டும் வெளியேறியது. அமெரிக்கா வெளியேறினாலும், பிற ஐரோப்பிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் நீடிக்கின்றன.

    ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியவுடன் ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அடுத்தடுத்து விதித்தது.

    ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கு சீனா, இந்தியா, தென்கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு தாம் விதித்த பொருளாதாரத் தடையில் இருந்து விதிவிலக்கு அளித்துவந்தது அமெரிக்கா. ஆனால், இந்த தடையில் இருந்து விதிவிலக்கு அளிப்பதை நிறுத்துவதாக கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்திருந்தது.

    அமெரிக்கத் தடைகளைத் தொடர்ந்து ஈரான் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பண மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்தது. இதனால், ஆண்டு பணவீக்க விகிதம் நான்கு மடங்காக உயர்ந்தது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறினார்கள். உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கின.

    பதற்றத்தை அதிகரிக்கும் குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா செயல்படுவதாக அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில் விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் மற்றும் குண்டு வீசும் போர் விமானங்களை ஈரானுக்குக்கு அமெரிக்கா அனுப்புகிறது.

    அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்தே போர்க் கப்பல் அனுப்பப்படுவதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    அமெரிக்கப் படையினர் மீதோ, அதன் கூட்டாளிகளின் படையினர் மீதோ ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் தணியாத ஆற்றலோடு பதிலடி தரப்படும் என்று ஜான் போல்டன் தெரிவித்தார். "யு.எஸ்.எஸ். ஆப்ரஹாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவும், குண்டு வீச்சு படையும், அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    ஈரானுடன் அமெரிக்கா சண்டையிட முனையவில்லை. ஆனால், ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையாக இருந்தாலும் சரி, ஈரான் பாதுகாப்புப் படையாக இருந்தாலும் சரி, ஏதாவது தாக்குதல் நடத்தினால், பதிலடி தருவதற்கு முழுவதுமாக தயாராக இருக்கிறோம்" என்றும் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். #USsendsaircraftcarrier #USsendsbomber #USwarnIran
    Next Story
    ×