search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் வழிபாட்டு தலங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு - அமெரிக்கா எச்சரிக்கை
    X

    இலங்கையில் வழிபாட்டு தலங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு - அமெரிக்கா எச்சரிக்கை

    இலங்கையில் நாளை முதல் 28-ம் தேதி வரை மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #srilankablasts #usawarning
    நியூயார்க்:

    இலங்கையில் கடந்த 21-ம் தேதி  ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் புகைப்படம் இன்று வெளியானது. இலங்கை போலீசார் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் உள்ளனர். தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதாக கருதப்படும் இவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்களையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

    இந்தநிலையில், இலங்கையில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், பொது இடங்களில் அதிகமாக கூட  வேண்டாம் என்றும், வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால் இலங்கையில் நாளை முதல் 28ம் தேதி வரை பொது இடங்களில் அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #srilankablasts #usawarning
    Next Story
    ×