என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- குப்பையில் கிடந்த வெடிபொருள் வெடித்ததால் மக்கள் பீதி
Byமாலை மலர்25 April 2019 4:48 AM GMT (Updated: 25 April 2019 4:48 AM GMT)
இலங்கையின் கொழும்பு அருகே உள்ள புகோடா நகரில் குப்பையில் கிடந்த பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். #SriLankaAttacks #SriLankaBlast
கொழும்பு:
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் என 359 பேர் பலியாகினர். இதேபோல் மேலும் தாக்குதல்களை நடத்துவதற்காக வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பிற பகுதிகளிலும் சந்தேகத்திற்கிடமான நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அங்குள்ள குப்பை பகுதியில் கிடந்த வெடிகுண்டு வெடித்திருக்கலம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர். #SriLankaAttacks #SriLankaBlast
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் என 359 பேர் பலியாகினர். இதேபோல் மேலும் தாக்குதல்களை நடத்துவதற்காக வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பிற பகுதிகளிலும் சந்தேகத்திற்கிடமான நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பு புறநகரான புகோடா நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு பின்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அங்குள்ள குப்பை பகுதியில் கிடந்த வெடிகுண்டு வெடித்திருக்கலம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர். #SriLankaAttacks #SriLankaBlast
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X