என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை போலீஸ் அதிகாரி பதவி விலக சிறிசேனா உத்தரவு
Byமாலை மலர்25 April 2019 3:11 AM GMT (Updated: 25 April 2019 3:11 AM GMT)
இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #SrilankanBlasts #Sirisena
கொழும்பு :
* இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவல் முன்கூட்டியே கிடைத்தும், செயல்பட தவறியதற்காக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
* இலங்கையில் மாடம்பி என்ற இடத்தில் உள்ள சர்வதேச பள்ளியில் ஒரு வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒரு மனித வெடிகுண்டு போன்ற தோற்றத்தில் உள்ளார். அவரிடம் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லை.
பயங்கரவாதிகளுக்கு அவர் பயிற்சி அளித்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
* தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவலை இலங்கைக்கு நாங்கள் அளிக்கவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் உளவு தகவல் அளித்ததாக இலங்கை மந்திரி ஹர்ஷா டி சில்வா கூறியதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் இந்த மறுப்பை அளித்துள்ளார். தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் அவர் கூறினார்.
* நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிவாங்க இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக இலங்கை மந்திரி ருபன் விஜேவர்த்தனே கூறி இருந்தார். அதை இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணைத்தலைவர் ஹில்மி அகமது நிராகரித்துள்ளார்.
“இரண்டு தாக்குதல்களுக்கும் இடைப்பட்ட கால அளவு மிகவும் குறுகலானது. இந்த அவகாசத்தில், இவ்வளவு பெரிய தாக்குதலை திட்டமிட முடியாது. எனவே, இரண்டுக்கும் முடிச்சு போடுவது அபத்தமானது” என்று அவர் கூறினார். #SrilankanBlasts #Sirisena
* இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவல் முன்கூட்டியே கிடைத்தும், செயல்பட தவறியதற்காக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
* இலங்கையில் மாடம்பி என்ற இடத்தில் உள்ள சர்வதேச பள்ளியில் ஒரு வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒரு மனித வெடிகுண்டு போன்ற தோற்றத்தில் உள்ளார். அவரிடம் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லை.
பயங்கரவாதிகளுக்கு அவர் பயிற்சி அளித்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
* தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவலை இலங்கைக்கு நாங்கள் அளிக்கவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் உளவு தகவல் அளித்ததாக இலங்கை மந்திரி ஹர்ஷா டி சில்வா கூறியதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் இந்த மறுப்பை அளித்துள்ளார். தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் அவர் கூறினார்.
* நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிவாங்க இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக இலங்கை மந்திரி ருபன் விஜேவர்த்தனே கூறி இருந்தார். அதை இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணைத்தலைவர் ஹில்மி அகமது நிராகரித்துள்ளார்.
“இரண்டு தாக்குதல்களுக்கும் இடைப்பட்ட கால அளவு மிகவும் குறுகலானது. இந்த அவகாசத்தில், இவ்வளவு பெரிய தாக்குதலை திட்டமிட முடியாது. எனவே, இரண்டுக்கும் முடிச்சு போடுவது அபத்தமானது” என்று அவர் கூறினார். #SrilankanBlasts #Sirisena
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X