search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை தலைநகர் கொழும்புவில் வெடிகுண்டுகளுடன் சுற்றும் வேன்,லாரி - மக்கள் பீதி
    X

    இலங்கை தலைநகர் கொழும்புவில் வெடிகுண்டுகளுடன் சுற்றும் வேன்,லாரி - மக்கள் பீதி

    இலங்கை தலைநகர் கொழும்புவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு வேன் மற்றும் லாரி சுற்றி வருவதாக வெளியான உளவுத்துறை தகவலையடுத்து மக்கள் பீதியடைந்துள்ளனர். #SriLankablasts #explosiveslorry
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ள நிலையில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு வேன், ஒரு லாரி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் கொழும்பு நகருக்குள் இன்று நுழைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை டி.ஐ.ஜி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய அந்த வாகனங்களின் பதிவு எண்களை வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    ஏற்கனவே மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் இலங்கை மக்கள் இந்த செய்திகளால் பதற்றமும், பீதியும் அடைந்துள்ள நிலையில், சந்தேகத்துக்குரிய வாகனங்களின் நடமாட்டம் தொடர்பாக 116 என்ற ஹாட்லைன் எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். #SriLankablasts #explosiveslorry  
    Next Story
    ×