search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தவந்த 4 பேர் கொல்லப்பட்டனர்
    X

    சவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தவந்த 4 பேர் கொல்லப்பட்டனர்

    சவுதி அரேபியா நாட்டின் தலைநகரான ரியாதில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்ற முயன்ற 4 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். #SaudiArabia #attackfoiled #policestationfoiled
    ரியாத்:

    சவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல் நிலையங்களை குறிவைத்து ஆயுதமேந்திய சிலர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    அவ்வகையில், அந்நாட்டின் தலைநகரான ரியாத் நகரின் வடமேற்கு பகுதியில் சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அல்-ஸுல்ஃபி காவல் நிலையத்தின் மீது சில மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் காவல் நிலையத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தாக்குதல் நடத்த வந்த 4 பேரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #SaudiArabia #attackfoiled #policestationfoiled
    Next Story
    ×