search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    140 உயிர்களை பறித்த இலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
    X

    140 உயிர்களை பறித்த இலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

    இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். #PMModi #Modicondemns #SriLankablasts
    புதுடெல்லி:

    இலங்கையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து ஆறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 140  பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    கோழைத்தனமான இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ’இலங்கையில் நிகழ்ந்த இந்த கொடூரமான சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்போன்ற காட்டுமிராண்டித்தனத்துக்கு நமது பிராந்தியத்தில் இடமில்லை.



    துயரமான இந்த வேளையில் இலங்கை மக்களுடன் இந்தியா துணையாக நிற்கும். இன்றைய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என மோடி குறிப்பிட்டுள்ளார். #PMModi #Modicondemns #SriLankablasts
    Next Story
    ×