என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனடாவில் 3 மலையேறும் வீரர்கள் பனிப்பாறைகளில் சிக்கி பலி
Byமாலை மலர்19 April 2019 5:16 AM GMT (Updated: 19 April 2019 5:16 AM GMT)
உலகப் புகழ்பெற்ற 3 மலையேறும் வீரர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
மாண்ட்ரியல்:
உலகப் புகழ்பெற்ற மலையேறும் வீரர்கள் ஜெஸ்ரோஸ்கெல்லி (36), ஹன்ஸ் ஜோர்ஜ் அயூயர் (35), டேவிட்லாமா (28), இவர்களில் ஜெஸ்ரோஸ்கெல்லி அமெரிக்காவை சேர்ந்தவர். மற்ற 2 பேரும் ஆஸ்திரியாவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் கனடாவில் உள்ள அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லையில் உள்ள பனி மலையில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
உரிய பாதுகாப்பு உபகரண வசதிகளுடன் மலையேறிய இவர்கள் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இருந்தும் அவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதற்கிடையே இவர்கள் மலையேறிய பகுதியில் பனிப்பாறை சரிவு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் 3 பேரும் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
மோசமான வானிலையே இவர்களின் மரணத்துக்கு காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மலையேறும் வீரர்கள் ஜெஸ்ரோஸ்கெல்லி (36), ஹன்ஸ் ஜோர்ஜ் அயூயர் (35), டேவிட்லாமா (28), இவர்களில் ஜெஸ்ரோஸ்கெல்லி அமெரிக்காவை சேர்ந்தவர். மற்ற 2 பேரும் ஆஸ்திரியாவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் கனடாவில் உள்ள அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லையில் உள்ள பனி மலையில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
உரிய பாதுகாப்பு உபகரண வசதிகளுடன் மலையேறிய இவர்கள் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இருந்தும் அவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதற்கிடையே இவர்கள் மலையேறிய பகுதியில் பனிப்பாறை சரிவு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் 3 பேரும் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
மோசமான வானிலையே இவர்களின் மரணத்துக்கு காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X