என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிரவ்மோடிக்கு லண்டனில் 2 சொகுசு வீடுகள்- புதிய தகவல்கள்
Byமாலை மலர்29 March 2019 7:52 AM GMT (Updated: 29 March 2019 7:52 AM GMT)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று லண்டனுக்கு தப்பிய நிரவ்மோடிக்கு அங்கு 2 சொகுசு வீடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #NiravModi
லண்டன்:
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.
இதற்கிடையே லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பாக வழக்கு இன்று லண்டன் கோர்ட்டில் நடைபெற உள்ளது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் அவரது வக்கீல்கள் தயாராக உள்ளனர்.
இந்த மனுவில் அதற்கான ஜாமீன் தொகையை அதிகரித்து குறிப்பிட நிரவ் மோடியின் வக்கீல் முடிவு செய்துள்ளார். நிரவ்மோடி லண்டனில் ரூ.80 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி சொகுசு வீட்டில் வசிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதுமட்டுமின்றி அவருக்கு இதுபோன்று மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த 2 வீடுகளையும் வேறு நபர்களுக்கு அவர் விற்பனை செய்து இருக்கிறார். தனது பாதுகாப்பு கருதி வீடுகளை விற்றது போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த 2 வீடுகளும் நிரவ் மோடிக்கு சொந்தமானவை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #NiravModi
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.
இதற்கிடையே லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பாக வழக்கு இன்று லண்டன் கோர்ட்டில் நடைபெற உள்ளது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் அவரது வக்கீல்கள் தயாராக உள்ளனர்.
இந்த மனுவில் அதற்கான ஜாமீன் தொகையை அதிகரித்து குறிப்பிட நிரவ் மோடியின் வக்கீல் முடிவு செய்துள்ளார். நிரவ்மோடி லண்டனில் ரூ.80 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி சொகுசு வீட்டில் வசிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதுமட்டுமின்றி அவருக்கு இதுபோன்று மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த 2 வீடுகளையும் வேறு நபர்களுக்கு அவர் விற்பனை செய்து இருக்கிறார். தனது பாதுகாப்பு கருதி வீடுகளை விற்றது போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த 2 வீடுகளும் நிரவ் மோடிக்கு சொந்தமானவை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #NiravModi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X