என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் - பீதியில் மக்கள்
Byமாலை மலர்24 March 2019 9:27 AM GMT (Updated: 24 March 2019 9:27 AM GMT)
இந்தோனேசியாவின் சில பகுதிகளில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர். 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சமீபத்திய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. #quakestrikes #Indonesiaquake
ஜகர்தா:
பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா நாட்டின் வடமேற்கில் உள்ள பென்டோலோ நகரில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின்னர் சுலவேசி தீவில் உள்ள பிட்டுங் நகரில் அடுத்ததாக 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்த நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு மலுக்கு பகுதியில் இன்று பிற்பகல் 6.3 ரிக்டர் அளவில் மூன்றாவதாக மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்களால் அப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. சில வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்து ஓட்டம்பிடித்த மக்கள் சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இன்றைய நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #quakestrikes #Indonesiaquake
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X