search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்
    X

    ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்

    உலக மகிழ்ச்சி தினைத்தையொட்டி, நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியர்கள் மகிழ்ச்சி ஓராண்டு காலத்தில் தொலைந்ததாக தெரியவந்துள்ளது. #WorldsHappiestCountriesReport #IndiaLostsHappiness
    வாஷிங்டன்:

    மகிழ்ச்சி எது என கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது.

    மனிதனின் அடிப்படை லட்சியம் மகிழ்ச்சியே, என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.

    இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியலினை சர்வே எடுத்து வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியல் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியம், சமூக ஆதரவு மற்றும் பெருந்தன்மை ஆகிய  காரணிகளை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் நேற்று ஐ.நா வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில், சர்வதேச அளவில் மகிழ்ச்சி நிறைந்த நாடுகளில் பின்லாந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு அறிக்கையில் 133வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 140வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. #WorldsHappiestCountriesReport #IndiaLostsHappiness

    Next Story
    ×