search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்சில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    X

    பிலிப்பைன்சில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    பிலிப்பைன்சில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கின. #PhilippinesEarthquake
    மணிலா:

    தெற்கு பிலிப்பைன்சின் சாரங்கனி மாகாணத்தில் இன்று காலை 7.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அலபேல் நகரில் இருந்து 10 கிமீ வடகிழக்கே கடலுக்கடியில் 96 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகாக பதிவாகியிருந்ததாகவும், பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் பூகம்பவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.



    இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

    அலபேல் நகருக்கு அருகில் உள்ள கோரோநடால், ஜெனரல் சான்டோஸ், தெற்கு கோட்டபாட்டோ, தவாவ், டாகுராங், சுல்தான் குதரத், கிதாபவன் மற்றும் ககயான் தி ஓரோ ஆகிய நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. #PhilippinesEarthquake
    Next Story
    ×