என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அகதிகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி - மெக்சிகோவில் சோகம்
Byமாலை மலர்8 March 2019 12:25 PM GMT (Updated: 8 March 2019 12:25 PM GMT)
மெக்சிகோ நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MexicoAccident
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டில் உள்ள கிளபாஸ் மாநிலத்தில் மத்திய அமெரிக்க அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 50க்கு மேற்பட்டோர் இருந்தனர்.
சோயலோ என்ற பகுதியில் வரும்போது லாரி தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 25 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் போக்குவரத்தை சீர்செய்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். லாரி கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #MexicoAccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X