என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கென்யாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி
Byமாலை மலர்4 March 2019 11:54 PM GMT (Updated: 4 March 2019 11:54 PM GMT)
கென்யாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் கென்யாவைச் சேர்ந்த விமானியும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #Kenya #HelicopterCrash
நைரோபி:
கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள துர்கானா ஏரியின் நடுவில் சிறிய தீவு ஒன்று அமைந்துள்ளது. இந்த தீவில் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். ஹெலிகாப்டர்கள் மூலமாக சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு 2 ஹெலிகாப்டர்கள் தேசிய பூங்காவிற்கு வந்தன. அவற்றில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் கென்யாவைச் சேர்ந்த விமானியும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள துர்கானா ஏரியின் நடுவில் சிறிய தீவு ஒன்று அமைந்துள்ளது. இந்த தீவில் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். ஹெலிகாப்டர்கள் மூலமாக சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு 2 ஹெலிகாப்டர்கள் தேசிய பூங்காவிற்கு வந்தன. அவற்றில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் கென்யாவைச் சேர்ந்த விமானியும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X