என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் அரசுப்படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 21 பேர் பலி
Byமாலை மலர்3 March 2019 1:45 PM GMT (Updated: 3 March 2019 1:45 PM GMT)
சிரியாவில் அல் கொய்தா ஆதரவாளர்களான பயங்கரவாதிகள் அரசுப்படைகள் மீது இன்று நடத்திய தாக்குதலில் 21 வீரர்கள் உயிரிழந்தனர். #Qaedalinkedgroup #21regimeforceskilled #Syriaregimeforces
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின் விமானப்படைகளும் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.
மேலும், சிரியாவின் பல பகுதிகளில் ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், இங்குள்ள இட்லிப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் அரசுப்படைகள் மீது இன்று நடத்திய தாக்குதலில் 21 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அல் கொய்தா ஆதரவாளர்களான அன்சர் அல்-தவ்ஹித் ஜிஹாதி படை என்னும் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இருதரப்பனருக்கும் இடையில் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Qaedalinkedgroup #21regimeforceskilled #Syriaregimeforces
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X