search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் அரசுப்படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 21 பேர் பலி
    X

    சிரியாவில் அரசுப்படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 21 பேர் பலி

    சிரியாவில் அல் கொய்தா ஆதரவாளர்களான பயங்கரவாதிகள் அரசுப்படைகள் மீது இன்று நடத்திய தாக்குதலில் 21 வீரர்கள் உயிரிழந்தனர். #Qaedalinkedgroup #21regimeforceskilled #Syriaregimeforces
    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின் விமானப்படைகளும் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.

    மேலும், சிரியாவின் பல பகுதிகளில் ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

    இந்நிலையில், இங்குள்ள இட்லிப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் அரசுப்படைகள் மீது இன்று நடத்திய தாக்குதலில் 21 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அல் கொய்தா ஆதரவாளர்களான அன்சர் அல்-தவ்ஹித் ஜிஹாதி படை என்னும் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. 

    இருதரப்பனருக்கும் இடையில் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Qaedalinkedgroup #21regimeforceskilled #Syriaregimeforces
    Next Story
    ×