என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா: வெள்ளிச் சுரங்க விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி
Byமாலை மலர்23 Feb 2019 2:18 PM GMT (Updated: 23 Feb 2019 2:18 PM GMT)
சீனாவில் தன்னாட்சி உரிமம் பெற்ற மங்கோலியா பகுதியில் உள்ள வெள்ளிச் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #mineaccident #Chinamineaccident
பீஜிங்:
வடக்கு சீனாவில் தன்னாட்சி உரிமம் பெற்ற மங்கோலியாவின் உட்புறத்தில் அமைந்துள்ள மேற்கு உஜிம்கின் பன்னேர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெள்ளிச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் இன்மான் என்னும் நிறுவனத்தை சேர்ந்த ஒரு சுரங்கத்தில் வழக்கம்போல் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பிற பகுதிகளில் இருந்து அந்த சுரங்கத்துக்கு சுமார் 50 தொழிலாளர்களை ஏற்றி வந்த ஒரு பஸ் சுரங்கத்தின் அடிப்பகுதியில் செங்குத்தாக கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாத விதமாக அந்த பஸ்சின் ‘பிரேக்’ செயலிழந்ததால் பயங்கரமான சப்தத்துடன் பக்கவாட்டு சுவரில் மோதியது.
(உள்நாட்டு நேரப்படி) காலை சுமார் எட்டு மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி 20 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், சுமார் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #mineaccident #Chinamineaccident
வடக்கு சீனாவில் தன்னாட்சி உரிமம் பெற்ற மங்கோலியாவின் உட்புறத்தில் அமைந்துள்ள மேற்கு உஜிம்கின் பன்னேர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெள்ளிச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் இன்மான் என்னும் நிறுவனத்தை சேர்ந்த ஒரு சுரங்கத்தில் வழக்கம்போல் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பிற பகுதிகளில் இருந்து அந்த சுரங்கத்துக்கு சுமார் 50 தொழிலாளர்களை ஏற்றி வந்த ஒரு பஸ் சுரங்கத்தின் அடிப்பகுதியில் செங்குத்தாக கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாத விதமாக அந்த பஸ்சின் ‘பிரேக்’ செயலிழந்ததால் பயங்கரமான சப்தத்துடன் பக்கவாட்டு சுவரில் மோதியது.
(உள்நாட்டு நேரப்படி) காலை சுமார் எட்டு மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி 20 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், சுமார் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #mineaccident #Chinamineaccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X