search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்
    X

    ஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்

    ஈராக் பெண்ணுக்கு ஒரே சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    பாக்தாத்:

    ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்தவர், யுசுப் பத்லே. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், இவரது 25 வயது மனைவி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன், அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    உலகிலேயே, ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்காவி இயோவா மாகாணத்தை சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்தன.

    கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×