search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமனில் சிறுவன் பாலியல் பலாத்காரம், கொலை - குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
    X

    ஏமனில் சிறுவன் பாலியல் பலாத்காரம், கொலை - குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

    ஏமன் நாட்டில் 12 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அவனைக் கொன்ற இரு குற்றவாளிகளுக்கு திறந்தவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Yemenexecutedtwomen #raping12yearold #murdering12yearoldboy
    சனா:

    ஏமன் நாட்டில் உள்ள துறைமுக நகரமான ஏடென் பகுதியில் வசித்துவந்த முஹம்மது சாத் என்ற 12 வயது சிறுவனை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கடத்திச் சென்ற சிலர் அவனை பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

    வலியால் கதறித்துடித்த சிறுவனின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்று விட்டதாக இருவரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருந்தனர்.

    சிறுவனின் பிரேதத்தை மறைப்பதற்கு உதவியதாக ஒரு பெண்ணும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் அவர்கள் மூவருக்கும் சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

    தண்டனை விதிக்கப்பட்ட பெண் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மீதமுள்ள இரு குற்றவாளிகளான வதா ரெஃபாத்(28) மற்றும் முஹம்மது காலெத்(31) ஆகியோருக்கு 7-2-2019 அன்று திறந்தவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    முறைப்படி, டாக்டர்களின் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் குற்றவாளிகள் இருவரும் குப்புறப் படுக்க வைத்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சியை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேரில் கண்டனர். சிலர் இந்த கோரக்காட்சியை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றமும் செய்தனர். #Yemenexecutedtwomen #raping12yearold #murdering12yearoldboy
    Next Story
    ×