search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக ரத்தம் எடுத்த நர்சுக்கு சிறை தண்டனை
    X

    மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக ரத்தம் எடுத்த நர்சுக்கு சிறை தண்டனை

    டென்மார்க்கை சேர்ந்த பெண் நர்ஸ், பயிற்சி பெறுவதற்காக தனது மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக ரத்தம் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Nursejailed
    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கை சேர்ந்த 36 வயது பெண், நர்ஸ் ஆக பணிபுரிந்தார். இவர் பயிற்சி பெறுவதற்காக தனது 7 வயது மகனின் உடலில் இருந்து ஒவ்வொரு வாரமும் ½ லிட்டர் ரத்தம் எடுத்துள்ளார்.

    அந்த சிறுவன் 11 மாத குழந்தையாக இருந்ததில் இருந்து 5 ஆண்டுகள் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரது மகன் குடல் நோயினால் அவதிப்பட்டு வருகிறான்.

    இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அந்த பெண் மீது ஹெர்னிங் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவர் தொடர்ந்து நர்சாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மகனின் உடலில் இருந்து எடுத்த ரத்தத்தை கழிவறையில் கொட்டி விட்டதாகவும், ஊசியை குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் விசாணையின்போது நர்சு தெரிவித்தார்.  #Nursejailed

    Next Story
    ×