என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்தில் கண்களை கவரும் இயற்கையின் அதிசய பனி உருளைகள்
Byமாலை மலர்8 Feb 2019 7:59 AM GMT (Updated: 8 Feb 2019 7:59 AM GMT)
இங்கிலாந்தின் நிலப்பரப்பில் படிந்திருந்த பனிதுகள்கள், தானாக பனி உருளைகளாக மாறி உருண்டு வந்த காட்சி காண்போரை வியக்க வைத்துள்ளது. #Raresnowrollers
மால்பாரோ:
இங்கிலாந்தில் உள்ள மால்போரோ பகுதியில் பனித்துகள்கள் நிலப்பரப்பின் மீது படிந்து, காண்பதற்கு வெள்ளை கம்பளம் போல் காட்சி அளிக்கின்றது.
மால்போரோ பகுதியில் இருக்கும் காடுகளில் பணி புரிபவர் பிரையன் பேய்ஸ் (51), வழக்கம்போல் பணிக்காக அப்பகுதியில் சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பனி உருளைகள் உருண்டு கொண்டு வந்துள்ளது. இதனை கண்ட பேய்ஸ் உடனடியாக புகைப்படம் எடுத்தார். இது வண்டி சக்கரத்தினைப் போன்று, நிலப்பரப்பில் படிந்திருந்த பனிதுகள்களினால் உருவாகியுள்ளது.
அப்பகுதியில் யாரோ இதனை செய்திருக்கலாம் என முதலில் எண்ணியுள்ளார். ஆனால் அருகில் சென்று பார்த்தபோது எவ்வித கால் தடங்களும் இல்லாததையடுத்து இயற்கையாக உருவானதை உணர்ந்தார். நிலப்பரப்பில் இருந்த பனிதுகள்களின் மீது காற்று வேகமாக வீசியதால், படர்ந்திருந்த பனிதுகள்கள் ஒருங்கிணைந்து உருளைகளாக மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுவரை இதுபோன்ற அதிசயத்தை கண்டதில்லை எனவும், இந்த உருளைகளின் நடுவே பார்த்தபோது சூரியனின் ஒளி அற்புதமாக பிரதிபலித்ததாகவும் பேய்ஸ் தன் அனுபவத்தினை உற்சாகத்துடன் தெரிவித்தார். மேலும் இந்த உருளைகள் குறிப்பிட்ட தொலைவை கடந்து தானாக உடைந்து மீண்டும் நிலப்பரப்பில் பனிதுகள்களாக கலந்ததாகவும் அவர் கூறினார். #Raresnowrollers
இங்கிலாந்தில் உள்ள மால்போரோ பகுதியில் பனித்துகள்கள் நிலப்பரப்பின் மீது படிந்து, காண்பதற்கு வெள்ளை கம்பளம் போல் காட்சி அளிக்கின்றது.
மால்போரோ பகுதியில் இருக்கும் காடுகளில் பணி புரிபவர் பிரையன் பேய்ஸ் (51), வழக்கம்போல் பணிக்காக அப்பகுதியில் சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பனி உருளைகள் உருண்டு கொண்டு வந்துள்ளது. இதனை கண்ட பேய்ஸ் உடனடியாக புகைப்படம் எடுத்தார். இது வண்டி சக்கரத்தினைப் போன்று, நிலப்பரப்பில் படிந்திருந்த பனிதுகள்களினால் உருவாகியுள்ளது.
அப்பகுதியில் யாரோ இதனை செய்திருக்கலாம் என முதலில் எண்ணியுள்ளார். ஆனால் அருகில் சென்று பார்த்தபோது எவ்வித கால் தடங்களும் இல்லாததையடுத்து இயற்கையாக உருவானதை உணர்ந்தார். நிலப்பரப்பில் இருந்த பனிதுகள்களின் மீது காற்று வேகமாக வீசியதால், படர்ந்திருந்த பனிதுகள்கள் ஒருங்கிணைந்து உருளைகளாக மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுவரை இதுபோன்ற அதிசயத்தை கண்டதில்லை எனவும், இந்த உருளைகளின் நடுவே பார்த்தபோது சூரியனின் ஒளி அற்புதமாக பிரதிபலித்ததாகவும் பேய்ஸ் தன் அனுபவத்தினை உற்சாகத்துடன் தெரிவித்தார். மேலும் இந்த உருளைகள் குறிப்பிட்ட தொலைவை கடந்து தானாக உடைந்து மீண்டும் நிலப்பரப்பில் பனிதுகள்களாக கலந்ததாகவும் அவர் கூறினார். #Raresnowrollers
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X