search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் தொடரும் பயங்கரவாதம் - தலிபான் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 28 பேர் பலி
    X

    ஆப்கானிஸ்தானில் தொடரும் பயங்கரவாதம் - தலிபான் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 28 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரின் முகாம்களில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, கைப்பற்றியுள்ள சில பகுதிகளையும் தாண்டி அதன் எல்லையை விரிவுபடுத்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலரும் தினம் தினம் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.
     


    அதன்படி, குண்டஸ் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த முகாம்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 பாதுகாப்பு படை அதிகாரிகள் வீர மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், குண்டஸ் மாகாணத்தின் தலாவியா பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack
    Next Story
    ×