என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விசா விதிமீறல் - இலங்கையில் 73 இந்தியர்கள் கைது
Byமாலை மலர்2 Feb 2019 1:33 PM GMT (Updated: 2 Feb 2019 1:33 PM GMT)
இலங்கையில் உரிய விசா இல்லாமல் தங்கியிருந்த 73 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் குடியுரிமைத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். #arrestedinSriLanka #visanorms #SriLankavisanorms
கொழும்பு:
இலங்கையில் உரிய விசா இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மீது அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவ்வகையில், தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மட்டுகாமா பகுதியில் ஒரு தொழிற்சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 49 இந்தியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, கடந்த மாதத்தில் இன்கிரியா பகுதியில் 24 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக இன்று தெரிவித்த அதிகாரிகள், கைதான அனைவரும் மிரிஹானா பகுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டனர். #73Indianarrested #violatingvisanorms #arrestedinSriLanka #visanorms #SriLankavisanorms
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X