என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொதிக்கும் தண்ணீர்கூட நொடிப்பொழுதில் உறைகிறது- அமெரிக்காவில் நிலவும் கடுங்குளிர்
Byமாலை மலர்2 Feb 2019 9:54 AM GMT (Updated: 2 Feb 2019 9:54 AM GMT)
அமெரிக்காவில் கொதிக்கும் தண்ணீர்கூட, நொடிப்பொழுதில் உறையும் அளவுக்கு வரலாறு காணாத பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிர் நிலவுகிறது. #USSnowstorm
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு பகுதியில் உள்ள சிகாகோ உள்ளிட்ட சில நகரங்களில் மைனஸ் 29 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவிற்கு கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளிவர இயலாமல், வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகளில் பனிப்பொழிவு அதிகரித்ததால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குளிரின் தாக்கத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதில், ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், ஒருவர் கொதிக்கும் நீருடன், வீட்டைவிட்டு வெளியே வந்து, வானத்தை நோக்கி ஊற்றுகிறார். ஆனால், அந்த கொதிநீர், வேகமாக வீசும் குளிர் காற்றினால், ஒரு நொடியில் வெண்பனித் துகள்களாக மாறி, காற்றுடன் கலந்துவிடுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. #USSnowstorm
அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடுங்குளிரினால் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பனியின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர்.
மத்திய மேற்கு பகுதியில் உள்ள சிகாகோ உள்ளிட்ட சில நகரங்களில் மைனஸ் 29 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவிற்கு கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளிவர இயலாமல், வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகளில் பனிப்பொழிவு அதிகரித்ததால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குளிரின் தாக்கத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதில், ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், ஒருவர் கொதிக்கும் நீருடன், வீட்டைவிட்டு வெளியே வந்து, வானத்தை நோக்கி ஊற்றுகிறார். ஆனால், அந்த கொதிநீர், வேகமாக வீசும் குளிர் காற்றினால், ஒரு நொடியில் வெண்பனித் துகள்களாக மாறி, காற்றுடன் கலந்துவிடுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. #USSnowstorm
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X