search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் சுட்டுக்கொலை
    X

    அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் சுட்டுக்கொலை

    அமெரிக்காவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் 2 பேரை சக போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள பீகன் பர்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 5 போலீசாரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து உடன் இருந்த சக போலீசார் தாக்குதல் நடத்திய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த போலீசார் 5 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×