என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்29 Jan 2019 7:24 PM GMT (Updated: 29 Jan 2019 7:24 PM GMT)
அமெரிக்காவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் 2 பேரை சக போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள பீகன் பர்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 5 போலீசாரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து உடன் இருந்த சக போலீசார் தாக்குதல் நடத்திய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த போலீசார் 5 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள பீகன் பர்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 5 போலீசாரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து உடன் இருந்த சக போலீசார் தாக்குதல் நடத்திய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த போலீசார் 5 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X