என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரு நாட்டு உறவில் விரிசல் - சீனாவுக்கான கனடா தூதர் ராஜினாமா
Byமாலை மலர்27 Jan 2019 7:49 PM GMT (Updated: 27 Jan 2019 7:49 PM GMT)
சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். #China #CanadaAmbassador #JohnMcCallum
ஒட்டாவா:
சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகளும், அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கடந்த மாதம் 1-ந் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் ஜஸ்டின் டிரிடியு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்து ஜஸ்டின் டிரிடியு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “நான் ஜான் மெக்கலமை பதவி விலகும்படி கேட்டு கொண்டேன். அவரின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹூவாய் நிறுவன தலைமை அதிகாரி மெங்வான்ஜவ் கைது விவகாரம் தவறானது என்று விமர்சித்த ஜான் மெக்கலம், அடுத்த நாளே தான் தவறாக பேசிவிட்டதாக கூறியதோடு, தனது பேச்சு குழப்பத்தை விளைவித்ததற்காக மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகளும், அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கடந்த மாதம் 1-ந் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் ஜஸ்டின் டிரிடியு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்து ஜஸ்டின் டிரிடியு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “நான் ஜான் மெக்கலமை பதவி விலகும்படி கேட்டு கொண்டேன். அவரின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹூவாய் நிறுவன தலைமை அதிகாரி மெங்வான்ஜவ் கைது விவகாரம் தவறானது என்று விமர்சித்த ஜான் மெக்கலம், அடுத்த நாளே தான் தவறாக பேசிவிட்டதாக கூறியதோடு, தனது பேச்சு குழப்பத்தை விளைவித்ததற்காக மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X