search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் - 8 பேர் பலி
    X

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் - 8 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகார் மாகாணத்தில் இன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அம்மாகாண கவர்னர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவரது பாதுகாவலர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். #Carbombattack #Afghanistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகார் மாகாண கவர்னரின் கார் பாதுகாப்பு வாகனங்களுடன் முஹம்மது அகா மாவட்டம் வழியாக இன்று சென்றுக் கொண்டிருந்தது.

    அப்போது தலிபான் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் நடத்திய கார்குண்டு தாக்குதலில் கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி உள்பட 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலில் கவர்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக சில ஊடகங்களும், காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வேறுசில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. #Carbombattack #Afghanistan 
    Next Story
    ×