search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
    X

    கொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

    கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் பள்ளியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. #ColumbiaSchoolAttack
    போகோடா:

    மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமியில் அமைந்துள்ள பள்ளியில் நேற்று விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொலம்பியா போலீஸ் பள்ளியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. #ColumbiaSchoolAttack
    Next Story
    ×