search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் 3 இந்தியர்களை முக்கிய பதவிகளுக்கு தேர்வு செய்தார் டிரம்ப்
    X

    அமெரிக்காவில் 3 இந்தியர்களை முக்கிய பதவிகளுக்கு தேர்வு செய்தார் டிரம்ப்

    அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்ற 3 இந்திய வம்சாவளிகளை தேர்வு செய்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்ற 3 இந்திய வம்சாவளிகளை தேர்வு செய்துள்ளார். அவர்கள், ரீட்டா பரன்வால், ஆதித்யா பம்சாய், பீமல் பட்டேல் ஆவார்கள்.

    இவர்களில் ரீட்டா பரன்வால், எரிசக்தித்துறை (அணுசக்தி) உதவி செயலாளராகவும், ஆதித்யா பம்சாய் தனிஉரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராகவும், பீமல் பட்டேல் நிதித்துறை உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களின் தேர்வு குறித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபைக்கு ஜனாதிபதி டிரம்ப் எழுதி உள்ளார். அந்த சபை, இவர்களின் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், அதன் ஒப்புதல் கிடைப்பதில் பிரச்சினை இல்லை. இந்த ஒப்புதல் கிடைத்து விட்டதால், ரீட்டா பரன்வால் செல்வாக்கு மிகுந்த எரிசக்தித்துறைக்கு (அணுசக்தி) தலைமை பொறுப்பு ஏற்பார். இந்த துறைதான் அணுசக்தி தொழில் நுட்ப ஆராய்ச்சி, வளர்ச்சி, நிர்வாகம் என அனைத்தையும் கவனிப்பது குறிப்பிடத்தக்கது.

    டிரம்ப் நிர்வாகத்தில் கேபினட் மந்திரி அந்தஸ்தில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்த இந்திய வம்சாவளி நிக்கி ஹாலியும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் ராஜ் ஷாவும் சமீபத்தில் பதவி விலகியது நினைவுகூரத்தக்கது. 
    Next Story
    ×