search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரின் நீதிமன்றக் காவல் நாளை வரை நீட்டிப்பு- இலங்கை நீதிமன்றம் உத்தரவு
    X

    புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரின் நீதிமன்றக் காவல் நாளை வரை நீட்டிப்பு- இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரின் நீதிமன்றக் காவலை நாளை வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TNFishermen #SrilankanNavy
    யாழ்ப்பாணம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடந்த 12ம் தேதி 136 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள்  கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ரத்தினம்மாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆனந்தராஜ் (வயது 22), விஷ்வா (23), அஜித் (22), வினோத் (21), ஆனந்தபாபு (35), இளங்கோவன் (30) ஆகிய 6 பேரும், ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரத்தினவேல், செல்லத்துரை (70), முருகன் (45) ஆகிய 3 பேரும் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.



    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும், ஜனவரி 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக் காவல் முடிவடைந்ததையடுத்து, 9 மீனவர்களும் இன்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் நீதிமன்றக் காவலை மேலும் ஒரு நாள் நீட்டித்து (நாளை வரை) நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 9 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நீதிமன்றக் காவல் முடிந்து நாளை மீண்டும் ஆஜர்படுத்தப்படும்போது, 9 பேரையும் நீதிமன்றம் விடுவிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #TNFishermen #SrilankanNavy
    Next Story
    ×