என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாலியில் பயங்கரவாத தாக்குதல்- 10 பேர் பலி
Byமாலை மலர்17 Jan 2019 6:26 AM GMT (Updated: 17 Jan 2019 6:26 AM GMT)
மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் எம்எஸ்ஏ கிளர்ச்சி இயக்கத்தினர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். #MaliAttack
பமாகோ:
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மாலி-நைஜர் எல்லையை ஒட்டிய பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்த பயங்கரவாதிகள், பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், எம்எஸ்ஏ கிளர்ச்சி இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் மினாகாவிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் நடந்தது. இப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதிகளின் வன்முறைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலான மக்கள் புலானி இனத்தவர்கள் ஆவர்.
தற்போது நடந்த தாக்குதலுக்கு எம்எஸ்ஏ இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கிடையிலான மோதலின் முடிவில் முதியவர்கள் உள்ளிட்ட 20 பேரை பயங்கரவாதிகள் கொலை செய்ததாகவும் அந்த இயக்கம் கூறியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம், இது குறித்து வல்லுனர்கள் குழு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அளித்துள்ள அறிக்கையில், “பயங்கரவாத குழுக்களுக்கும், சர்வதேச மற்றும் மாலி அரசுப் படைகள் ஆகியவற்றிற்கும் இடையேயான மோதல்களால் பொது மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது”, என கூறப்பட்டது.
2012-ல் முக்கியமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயங்கரவாதிகளின் எழுச்சியை தடுப்பதற்கு மாலி படைகளுக்கு பிரான்ஸ் உதவி செய்தது. அதன்பின்னர் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட 2015 ம் ஆண்டின் சமாதான உடன்படிக்கை இருந்தபோதிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.
அப்போதிலிருந்து, மாலியின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள், அண்டை நாடான பர்கினா பாசோ மற்றும் நைஜர் எல்லைகளில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. #MaliAttack
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மாலி-நைஜர் எல்லையை ஒட்டிய பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்த பயங்கரவாதிகள், பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், எம்எஸ்ஏ கிளர்ச்சி இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் மினாகாவிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் நடந்தது. இப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதிகளின் வன்முறைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலான மக்கள் புலானி இனத்தவர்கள் ஆவர்.
தற்போது நடந்த தாக்குதலுக்கு எம்எஸ்ஏ இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கிடையிலான மோதலின் முடிவில் முதியவர்கள் உள்ளிட்ட 20 பேரை பயங்கரவாதிகள் கொலை செய்ததாகவும் அந்த இயக்கம் கூறியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம், இது குறித்து வல்லுனர்கள் குழு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அளித்துள்ள அறிக்கையில், “பயங்கரவாத குழுக்களுக்கும், சர்வதேச மற்றும் மாலி அரசுப் படைகள் ஆகியவற்றிற்கும் இடையேயான மோதல்களால் பொது மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது”, என கூறப்பட்டது.
2012-ல் முக்கியமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயங்கரவாதிகளின் எழுச்சியை தடுப்பதற்கு மாலி படைகளுக்கு பிரான்ஸ் உதவி செய்தது. அதன்பின்னர் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட 2015 ம் ஆண்டின் சமாதான உடன்படிக்கை இருந்தபோதிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.
அப்போதிலிருந்து, மாலியின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள், அண்டை நாடான பர்கினா பாசோ மற்றும் நைஜர் எல்லைகளில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. #MaliAttack
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X