என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவில் கியாஸ் கசிந்து விபத்து - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
Byமாலை மலர்1 Jan 2019 1:03 PM GMT (Updated: 1 Jan 2019 1:03 PM GMT)
ரஷியாவின் குடியிருப்பில் காஸ் கசிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. #RussiaGasExplosion
மாஸ்கோ:
ரஷியா நாட்டின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள ஆர்ஸ்க் நகரில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று திடீரென காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இரு குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காணாமல் போன பலரை தேடி வருகிறோம் என முதல் கட்ட தகவல் வெளியானது.
தகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அந்த குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்தது.
இந்நிலையில், காஸ் கசிந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மேலும் 3 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டது. இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #RussiaGasExplosion
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X