என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீவிரவாத மிரட்டல் புகார்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கவாஜா சகோதரர் கைது
Byமாலை மலர்4 Dec 2018 9:20 AM GMT
தீவிரவாத மிரட்டல் புகார் விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன கவாஜாவின் சகோதரர் அர்சகான் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். #Khawaja
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். சமீபத்தில் இந்தியாவில் நடந்த கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டு விளையாடினார். காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.
கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இவரது சகோதரர் அர்சகான் கவாஜா (39). சமீபத்தில் இவர் சிட்னி புறநகர் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிரவாத தடுப்பு போலீசாரால் ஒரு ஆவணம் கைப்பற்றப்பட்டது.
அதில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததும் தாக்குதல் நடத்துபவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த ஆவணம் அர்சகான் கவாஜா உடன் படிக்கும் முகமது கமெர் நிஷாம்தீன் எழுதியாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாணையில் நிஷாம்தீன் கையெழுத்து அந்த கடிதத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதை அறிந்த போலீசார் அவரை எந்தவித வழக்கும் இல்லாமல் விடுவித்தனர்.
இந்நிலையில் ஒரு பெண் விவகாரத்தில் அர்சகான் கவாஜா அந்த கடிதத்தை எழுதியதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இவரது சகோதரர் அர்சகான் கவாஜா (39). சமீபத்தில் இவர் சிட்னி புறநகர் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிரவாத தடுப்பு போலீசாரால் ஒரு ஆவணம் கைப்பற்றப்பட்டது.
அதில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததும் தாக்குதல் நடத்துபவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த ஆவணம் அர்சகான் கவாஜா உடன் படிக்கும் முகமது கமெர் நிஷாம்தீன் எழுதியாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாணையில் நிஷாம்தீன் கையெழுத்து அந்த கடிதத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதை அறிந்த போலீசார் அவரை எந்தவித வழக்கும் இல்லாமல் விடுவித்தனர்.
இந்நிலையில் ஒரு பெண் விவகாரத்தில் அர்சகான் கவாஜா அந்த கடிதத்தை எழுதியதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X