என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
22 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கைது செய்தது
Byமாலை மலர்30 Nov 2018 9:41 AM GMT (Updated: 30 Nov 2018 9:41 AM GMT)
பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 22 மீனவர்களை அந்நாட்டின் கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இஸ்லாமாபாத்:
அராபிய கடலில் மீன் பிடிக்கும்போது தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் எதிர்நாட்டை சேர்ந்த மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து வருகிறது.
அவ்வகையில், கடந்த அக்டோபர் மாதம் மற்றும் இந்த மாத துவக்கத்தில் 24 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கராச்சி அருகேயுள்ள கடல் பகுதியில் நேற்று கைது செய்தனர். அவர்கள் சென்ற 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லந்தி கிளைச்சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இன்று கோர்ட்டில் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Pakistanarrests #Indianfishermen #Indianfishermenarrested
அராபிய கடலில் மீன் பிடிக்கும்போது தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் எதிர்நாட்டை சேர்ந்த மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து வருகிறது.
அவ்வகையில், கடந்த அக்டோபர் மாதம் மற்றும் இந்த மாத துவக்கத்தில் 24 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கராச்சி அருகேயுள்ள கடல் பகுதியில் நேற்று கைது செய்தனர். அவர்கள் சென்ற 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லந்தி கிளைச்சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இன்று கோர்ட்டில் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Pakistanarrests #Indianfishermen #Indianfishermenarrested
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X