search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசம் - பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் பலி
    X

    வங்காளதேசம் - பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் பலி

    வங்காளதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகினர். #Accident
    டாக்கா:

    வங்காளதேசத்தின் பெனி மாவட்டத்தில் உள்ள சடார் உபசிலா பகுதி அருகே ஷரிஷாடி எனுமிடத்தில் ஆளில்லா ரெயில்வே கிராசிங் அமைந்துள்ளது.

    சட்டோகிராமில் இருந்து மியான்மர் நோக்கி செல்லும் நசிராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை இந்த கிராசிங்கில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த கிராசிங்கை கடக்க முயன்ற பேருந்து மீது எக்ஸ்பிர்ஸ் ரெயில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பய்ணம் செய்த ஒரு குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பேருந்து மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
    Next Story
    ×