search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது
    X

    பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது

    பாகிஸ்தானில் உள்ள சீன நாட்டு தூதரகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #PakistanTerrorAttack
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீன தூதரகம் செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் அந்த தூதரகத்தில் நுழைந்த தற்கொலைப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

    பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சீனா, இந்தியா ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. 

    இந்நிலையில், சீன தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #PakistanTerrorAttack
    Next Story
    ×