என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு - பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி
Byமாலை மலர்20 Nov 2018 3:12 AM GMT (Updated: 20 Nov 2018 3:12 AM GMT)
சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #ChicagoHospitalShooting
சிகாகோ:
இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையின் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி என 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ChicagoHospitalShooting
அமெரிக்காவின் சிகோகா நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையின் கார் பார்க்கிங் பகுதியில் நேற்று புகுந்த ஒரு மர்ம நபர் திடீரென அங்கிருந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனைப் பார்த்த போலீசார் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையின் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி என 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ChicagoHospitalShooting
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X