என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லண்டன் கோவிலில் 3 கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை
Byமாலை மலர்12 Nov 2018 5:47 AM GMT (Updated: 12 Nov 2018 5:47 AM GMT)
லண்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் இருந்த 3 கிருஷ்ணர் சிலைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #SwaminarayanTemple
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடக்கு பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டில் இந்த கோவிலில் வழிபாடு தொடங்கியது. லண்டனில் வாழும் இந்துக்கள் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இந்த கோவிலில் இருந்த 3 கிருஷ்ணர் சிலைகள் திடீரென மாயமாகிவிட்டன. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் பணம் மற்றும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஸ்காட்லாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் வீடியோ பதிவு மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை முடிந்த சில மணிநேரங்களில் இந்த சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவை பித்தளையால் செய்யப்பட்டவை.
ஆனால் அவை தங்கத்தினால் செய்யப்பட்டவை என தவறாக கருதி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. உண்மையை அறிந்து அந்த சிலைகளை கொள்ளையர்கள் மீண்டும் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் என நம்புவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோவிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை போனதால் பக்தர்கள் மிகவும் மனவருத்தத்தில் உள்ளனர். #SwaminarayanTemple
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடக்கு பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டில் இந்த கோவிலில் வழிபாடு தொடங்கியது. லண்டனில் வாழும் இந்துக்கள் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இந்த கோவிலில் இருந்த 3 கிருஷ்ணர் சிலைகள் திடீரென மாயமாகிவிட்டன. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் பணம் மற்றும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஸ்காட்லாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் வீடியோ பதிவு மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை முடிந்த சில மணிநேரங்களில் இந்த சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவை பித்தளையால் செய்யப்பட்டவை.
ஆனால் அவை தங்கத்தினால் செய்யப்பட்டவை என தவறாக கருதி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. உண்மையை அறிந்து அந்த சிலைகளை கொள்ளையர்கள் மீண்டும் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் என நம்புவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோவிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை போனதால் பக்தர்கள் மிகவும் மனவருத்தத்தில் உள்ளனர். #SwaminarayanTemple
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X