search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலிபோர்னியா மதுபான விடுதியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - பலர் காயம்
    X

    கலிபோர்னியா மதுபான விடுதியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - பலர் காயம்

    கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர். #CaliforniaBarShooting
    தவுசண்ட் ஓக்ஸ்:

    அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் மாணவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி புளோரிடாவில் சட்டம் இயற்றப்பட்டது.

    இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.



    தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாருக்குள் இருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும், இதில் பலர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    தாக்குதல் பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த பாரை சுற்றி வளைத்தனர். பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. #CaliforniaBarShooting
    Next Story
    ×