search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு தபால்தலை வெளியிட்டு தீபாவளிக்கு சிறப்பு சேர்த்த ஐ.நா. சபை
    X

    சிறப்பு தபால்தலை வெளியிட்டு தீபாவளிக்கு சிறப்பு சேர்த்த ஐ.நா. சபை

    தீபாவளி பண்டிகையையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் தபால் சேவைத்துறை சிறப்பு தபால்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. #Diwali #UN #stamp
    நியூயார்க்:

    அமெரிக்காவில் அதிகளவில் இந்தியர்கள் வாழ்ந்துவரும் நிலையில் இந்தியர்களின் முதன்மை பண்டிகையான தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்க அரசின் சார்பில் அதிபரின் வெள்ளை மாளிகையில் இந்திய பிரமுகர்களுடன் தீபாவளி விருந்து கொண்டாட்ட நிகழ்ச்சியை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தொடங்கி வைத்தார்.

    இதைதொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் தடபுடலான விருந்துடன் தீபாவளி பண்டிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.



    இந்நிலையில், தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் ஐ.நா. சபை சார்பில் தபால்தலை வெளியிட வேண்டும் என அமெரிக்காவில் வாழும் இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

    இதன் அடிப்படையில், அமெரிக்கப் பணமான 1 டாலர் 15 சென்ட் விலைமதிப்பில் தீபங்களுடன் கூடிய முதல் தபால்தலை வரிசையை வெளியிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் தபால் சேவைத்துறை  தீபாவளியை சிறப்பித்துள்ளது. #Diwali #UN #stamp
    Next Story
    ×