search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் சபஹார் துறைமுக விவகாரம் - இந்தியாவிற்கு விலக்கு அளித்தது அமெரிக்கா
    X

    ஈரான் சபஹார் துறைமுக விவகாரம் - இந்தியாவிற்கு விலக்கு அளித்தது அமெரிக்கா

    ஈரானில் உள்ள சபஹார் துறைமுக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்கா பொருளாதார தடைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளித்துள்ளது. #ChabaharPort #USSanctions #USExemptedIndia
    வாஷிங்டன்:

    ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமல்படுத்தியுள்ளது. நவம்பர் 5-ம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த பொருளாதார தடை இதுவரை இல்லாத மிக கடுமையானது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஈரானிலிருந்து பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு தடை விதித்துள்ளது. எனினும், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளது.

    இந்தப் பொருளாதாரத் தடைகளால், அணு ஆயுதங்கள் தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என்று அமெரிக்கா நம்புகிறது.



    இந்நிலையில், ஈரானில் சபஹார் துறைமுகத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், ஆப்கானிஸ்தானை இணைக்கும் ரெயில்பாதை அமைக்கவும், இந்தியாவிற்கு சில அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, “நீண்ட ஆலோசனைக்கு பிறகு, சபஹார் துறைமுகத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், இங்கிருந்து ஆப்கனுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், அமெரிக்கா சில அனுமதியை வழங்கி உள்ளது. ஈரானிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யவும் அனுமதித்துள்ளது” என்றார். #ChabaharPort #USSanctions #USExemptedIndia
    Next Story
    ×