search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளோரிடா யோகா கிளப்பில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
    X

    புளோரிடா யோகா கிளப்பில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள யோகா கிளப்பில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #FloridaShooting
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் யோகா ஸ்டூடியோ உள்ளது. இங்கு நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்தார்.

    அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர் எனவும், துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்டமாக தகவல் வெளியானது. 

    தகவலறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #FloridaShooting
    Next Story
    ×