search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு
    X

    சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

    சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் பாறை வெடித்து சரிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. #Chinacoalmineaccident #coalmineaccident #Deathtollrises
    பீஜிங்:

    சீனாவின் பல பகுதிகளில் அனுமதி இல்லாத நிலக்கரிச் சுரங்கங்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காமல் இயங்கி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பல தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

    இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்துக்குட்பட்ட ஒரு நிலக்கரி சுரங்கத்தினுள் கடந்த 20-ம் தேதி மிகப்பெரிய பாறை ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால், அந்த சுரங்கத்துக்குள் செல்லும் இரு நுழைவு வாயில்களும் மூடிக்கொண்டன.
     


    இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இதற்கிடையே, மூடப்பட்ட நுழைவு வாயில்களில் இருந்த இடிபாடுகள் நீக்கப்பட்டு உள்ளே சென்ற மீட்பு படையினர் நேற்று இரு பிரேதங்களை கண்டெடுத்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், இன்று மீட்புப் படையினர் மேலும் ஆறு பிரேதங்களை கண்டெடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Chinacoalmineaccident #coalmineaccident #Deathtollrises
    Next Story
    ×