search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ
    X

    கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அரேபியா அதிகாரிகளின் விசாக்கள் ரத்தாகும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #JamalKhashoggi #MikePompeo
    வாஷிங்டன்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணை தூதரகம் சென்று விசாரித்தனர்.

    இதற்கிடையே, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா உறுதி செய்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.



    இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அரேபியா அதிகாரிகளின் விசாக்கள் ரத்தாகும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அரேபிய அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஏற்கனவே, ஜமால் கசோக்கி படுகொலை தொடர்பாக சவுதி அரேபியா அரசு அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #JamalKhashoggi #MikePompeo
    Next Story
    ×